இளைஞர் திறன் திருவிழா

Loading

மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்  (04.06.2022) அன்று ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “இளைஞர் திறன் திருவிழாவினை” குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா., மரியாதைக்குரிய துணை மேயர் வே.செல்வராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.கெட்ஸி லீமா அமாலினி உட்பட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *