முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

Loading

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.*
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தப்பின், முதல் முறையாக கருணாநிதியின் பிறந்தநாள் நேற்று  அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ஓமந்தூரார் வளாகத்துக்கு வந்த முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் கட்சி கொடியேந்தி வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ட்ரேன் மூலம் கருணாநிதி சிலைக்கு  மலர் மாறி பொழியப்பட்டது அதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற , உறுப்பினர்கள், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக  உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதை தொடர்ந்து கருணாநிதி வேடம் அணிந்து வந்த சென்னை எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
0Shares

Leave a Reply