மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே அனைத்து கிறிஸ்தவ மக்கள் களத்தின் தலைவர் செபஸ்டின் சூசைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Loading

கிறிஸ்தவ சபைகளில் சாதியை ஊக்குவிக்கும் திருமண தகவல் மையங்கள், பணி குழுக்ககளை உடனடியாக நீக்க உத்தரவிட வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே அனைத்து கிறிஸ்தவ மக்கள் களத்தின் தலைவர் செபஸ்டின் சூசைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்பு செபாஸ்டின் சூசைராஜ் கூறும்பொழுது மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பேராயர் அந்தோணி பாப்புசாமி மீது அளிக்கப்பட்ட சாதிய ஊக்குவிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிறிஸ்தவர் அல்லாத இந்து மதத்தை சார்ந்தவர்களை திருச்சபை அமைப்புகளில் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். கிறிஸ்தவ சபைகளில் சாதியை ஊக்குவிக்கும் திருமண தகவல் மையங்கள் பணிகளை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்.கிறிஸ்தவ மதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஜார்ஜ் ஆங்கிலிக்கன் சர்ச்சில் நடைபெற்ற சண்டைக்கு காரணமாக இருந்த செயலர் டாக்டர் ஆர்தர் ஆசீர்வாதம் மற்றும் அவரது சகாக்கள்  மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றார். கிறிஸ்தவ மக்கள் கட்சி தலைவர் சாம் ஏசுதாஸ், தமிழக மக்கள் நல கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்டர் ராஜேந்திரன், சிறுபான்மை மக்கள் நல கட்சி பேராயர் சியாம், குளோரி, கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply