வேலூர் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.
வேலூர் ஏப்ரல் 27 .
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி சார்பில் 10 நாள் நாட்டு நலப்பணி சிறப்பு திட்ட முகாம் அருகில் உள்ள இடையன்சாத்து கிராமத்தில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் கிராம பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பெண்கள் பாதுகாப்பு யோகா என பல்வேறு விழிப்புணர்வு பேரணி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த கிராம பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மற்றும் பள்ளி கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது.
நிறைவு நாள் முன்னிட்டு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருளரசு, தலைமை தாங்கினார்.. திட்ட அலுவலர் கந்த ஷோபா, வரவேற்றார். திட்ட அலுவலர் பிரவீன்ராஜ், திட்ட அறிக்கையை வாசித்தார். துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் ரஹீலா பேகம், அன்புக்கரசி, பத்மநாபன், கலைவாசன், சுப்பிரமணிய, பாரதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர் கிருபானந்தன் நன்றி கூறினார்.