சென்னை ராயபுரம் வார்டு49 தாண்டவராயன் தெருவில் சாலையோர மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் முறிந்து விழுந்த மரத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.தகவல் அறிந்து சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டும் இயந்திரத்தை கொண்டு அப்புரபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.