தருமபுரி கலை கல்லூரியில் சித்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சி தலைவர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

Loading

5,வது சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சென்னை தாம்பரம் சானட்டோரியம் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை செடிகள் வழங்குதல் தருமபுரி அரசு கலைக்கல்லூரி நடைபெற்றது இந்த முகாமினை மாவட்ட ஆட்சிதலைவர் திவ்யதர்சினி அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ஏற்றி வைத்து மூலிகை செடிகளின் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார் மேலும் பயனாளிகளுக்கு மூலிகை செடிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி,கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன்,தருமபுரி கிருஷ்ணகிரி சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,இந்திய சித்த மருத்துவ இயக்குனர் மீனாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *