புதுவையில் மேல் நிலைப்பள்ளிகள் ஆரம்பித்ததிலிருந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அதிக இடங்களைப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்
புதுவையில் மேல் நிலைப்பள்ளிகள் ஆரம்பித்ததிலிருந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அதிக இடங்களைப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 10 மாணவர்களும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 5 மாணவர்களும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 6 மாணவர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 5 மாணவர்களும், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 4 மாணவர்களும் M.B.B.S. படிப்பில் சேர்ந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் ஸ்டெதாஸ்கோப் (Stethoscope) வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பள்ளி முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர்.