உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தங்கள் மகன் மகள்களை தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வர வேண்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சம் புகுந்த 3 மாணவ மாணவிகளின் பெற்றோர்

Loading

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தங்கள் மகன் மகள்களை தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வர வேண்டி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சம் புகுந்த 3 மாணவ மாணவிகளின் பெற்றோர்

திருவள்ளூர் மார்ச் 1-
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் -குமாரி தம்பதிகளின் மகள் பிரியதர்ஷினி என்பவர் நான்காவது ஆண்டாக உக்ரைனில் உள்ள கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால், தாங்கள் செய்வதறியாமல் தவித்து வருவதாகவும், குண்டு மழை பொழிவதால் மகள் மிகுந்த பயத்தோடு அங்கு தங்கியிருப்பதாகவும் இது குறித்து தங்களிடம் பேசும் போது உடனடியாக தன்னை இங்கிருந்து மீட்கும் படி பேசியதால் பெரும் வேதனையில் உள்ளதாகலும் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

அதே போல் திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முருகன் என்பவரது மகன் ஜீவானந்தம் முதலாம் ஆண்டு மருத்துவம் பயில சேர்ந்துள்ளார். நெசவுத் தொழிலாளியான தங்கள் குடும்பத்தில் யாரேனும் மருத்துவம் பயில வேண்டும் என்ற ஆசையில் உக்ரைன் நாட்டிற்கு படிக்க அனுப்பி வைத்ததாகவும் தற்போது போர் காரணமாக பதற்றம் நிலவுவதால் மகனை மீட்டுத் தருமாறு மாணவனின் தந்தை முருகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

அதே போல் திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள ஜார்ஜ் அலெக்சாண்டர் சுரேஷ் என்பவரது மகள் ஏஞ்சல் என்பவர் கார்க்கி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார், இவரும் தனது மகளை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இது வரை திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 5 மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நெகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *