மதுரவாயல் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது

Loading

மதுரவாயல் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த
விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது.

இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி, 6வது பிளாக்கில் வசிக்கும்
தினேஷ், வ/29, த/பெ.ராஜாராம், என்பவர கடந்த 24.02.2022 அன்று இரவு
அவரது யமஹா R15 இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு,
மறுநாள் (25.02.2022) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை
யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தினேஷ் T-4 மதுரவாயல்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து
விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில்
பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில் 3
நபர்கள் மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு மேற்படி இருசக்கர
வாகனத்தை திருடிச் சென்ற எதிரிகளில் வெங்கடேஷ், வ/19, சுரேஷ், மேல்பாடி
முத்து தெரு, நுங்கம்பாக்கம், சென்னை என்பவரை என்பவரை கைது
செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் பறிமுதல்
செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி வெங்கடேஷ் அவரது நண்பர்கள் இருவருடன்
சேர்ந்து மேற்படி இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
அதன்பேரில், தலைமறைவாக உள்ள மற்ற 2 எதிரிகளை பிடிக்க காவல்
குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட எதிரி வெங்கடேஷ் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(26.02.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி
சிறையில் அடைக்கப்பட்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *