பூச்சிக்கொல்லி மருந்து அடித்து நகை பறித்த பெண் கைது

Loading

கோவை,

கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் தண்டு மாரியம்மன் கோவில் அருகே பரிசு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி செல்வராணி (வயது 57) .கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த ஒரு பெண் செல்வராணி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து உள்ளார்.

அப்போது சத்தம் போட்ட செல்வராணியின் முகத்தில் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை அடித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை செல்வராணி விடாமல் பிடித்து கொண்டார்.

இறுதியில் செல்வராணியை தள்ளிவிட்டு விட்டு அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். வெளியே ஓடிய அந்த பெண்ணை சத்தம் போட்டு கொண்ட செல்வராணி துரத்தினார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் அவரை கையும் களவுமாக பிடித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *