நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு உத்தரவு

Loading

சென்னை, நியாயவிலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து சிறுதானியங்கள் விற்பனை செய்வதற் கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தீன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டபோது, சிறு தானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுவதோடு, அதற்கான விலை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானிய வகை அரிசியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, சென்னை, கோவை போன்ற நகரங்களில் நியாயவிலைக் கடை மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆலோசனை

இதுகுறித்து அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னை மற்றும் கோவையில் சில கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஏற்கெனவே வழங்கப்படும் பொருட்களுடன் சிறுதானியங்களையும் பரீட்சார்த்த முறையில் விற்பனை செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டது. சிறுதானியங்களை கொள்முதல் செய்வது, அவற்றை மதிப்பு கூட்டுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

குழு அமைப்பு

இந்த நிலையில், அரசுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் சிறுதானியங் களை வாங்கி விற்பனை செய்வது குறித்த நடைமுறைகளை வேளாண் சந்தை மற்றும் வேளாண்மை தொழில் இயக் குநர் அளித்துள்ளார்.

அதில், கூட்டுறவுத் துறை, வேளாண் மைத் துறை, வேளாண் சந்தை மற்றும் வேளாண்மை தொழில் துறை, வேளாண் உற்பத்தி அமைப்புகள், வேளாண்மை பல்கலைக்கழகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகளை தேர்வு செய்து குழு அமைக்கலாம் என்றும் அந்த குழுவின் ஆலோசனைப்படி சிறுதானிய விற்பனை நடைமுறைகளையும், விலை யையும் நிர்ணயிக்கலாம் என்றும் கூறியுள் ளார்.

அனுமதி

இந்த கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, சென்னை, கோவையில் கூட்டுறவு மற்றும் பொது விநியோக கழகம் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் பரீட்சார்த்த முறையில் சிறுதானியங்களை விநியோகிக்க அரசு அனுமதி அளிக்கிறது.

இதற்காக அமைக்கப்படும் குழுவில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைவராக இருப்பார். வேளாண்மை இயக்குநர், வேளாண் சந்தை மற்றும் வேளாண்மை தொழில் இயக்குநர், வேளாண் உற்பத்தி அமைப்பு பிரதிநிதி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பிரதிநிதி, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பிரதிநிதி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினராக இருப்பார்கள்.

பாக்கெட்டுகளில்…

அதோடு, மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அளவிலான குழுவை இதற் கென்று நியமித்துக் கொள்ள வேண்டும். ராகி, கம்பு, திணை, குதிரைவாலி அரிசி, சாமை, வராகு உள்ளிட்ட சிறுதானியங் களை அவற்றை உற்பத்தி செய்யும் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் உற்பத்தி அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யலாம்.

மதிப்பு கூட்டப்பட்ட அந்த தானியங் களையும் அந்த அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யலாம். 500 கிராம், ஒரு கிலோ பாக்கெட்டுகளில் அடைக்க வேண்டும். அதில் விலை, உபயோகிக்கும் கால அளவு, சான்று எண் ஆகியவற்றை அச்சிடப்பட வேண்டும்.

இதுகுறித்த தகுந்த விளம்பரங்களை மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *