சென்னை அணி தோல்வி ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

Loading

பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 0-3 என்ற கோல் கணக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 8வது சீசன் கோவாவில் நடக்கிறது. நேற்று பம்போலிம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. போட்டியின் 12வது நிமிடம் பெங்களூரு அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதை இமான் கோலாக மாற்றினார். 42வது நிமிடம் அசத்திய உடாண்டா சிங், மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதியில் பெங்களூரு அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய உடாண்டா சிங், 52வது நிமிடம் மற்றொரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய போதும் சென்னை தரப்பில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *