உதயநிதியை துணைமுதலமைச்சர் ஆக்குங்கள் முதல்வரிடம் விவசாயிகள் நேரில் கோரிக்கை

Loading

சென்னை, ஜன- 28

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிக்காமணி தலைமையில் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ,கர்நாடக, மாநிலத்தை சேர்ந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

இதன் பின்னர் தெய்வசிகாமணி அளித்த பேட்டி

விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தோம். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்,. மேலும் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துளோம் அவரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்

மேலும் விவசாயிகளுக்கு வேண்டியதை கேட்ட உடனே செய்து கொடுக்கும் திறன் மிக்க முதல்வராக ஸ்டாலின் திகழ்வதாகவும், இது திமுக அரசு என்பதை விட விவசாயிகளின் அரசாகவும் மக்களின் அரசாகவும் உள்ளது என்றும் தெரிவித்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *