பெற்ற மகளையே பலமுறை கற்பழித்த 42 வயது தந்தை.! வெளியில் சொல்ல முடியாமல் தவித்த மகள்.

Loading

42 வயதான தந்தை தனது மகளை கற்பழிப்ப செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் 42 வயது நபர் தனது 15 வயது மகளை கற்பழித்ததற்காக கைது செய்யப்பட்டார். ஜனவரி 23 நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். சிறுமி தனது தொலைபேசியில் அதிக நேரத்தை செலவு செய்ததால் கோபமடைந்த தந்தை, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மன உளைச்சலைத் தாங்க முடியாமல், சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து தனது ஆசிரியரிடம் சமீபத்தில் கூறியுள்ளார். ஆசிரியர் தந்தையை பள்ளிக்கு அழைத்தார், பின்னர் சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டார். இருப்பினும், சனிக்கிழமை மாலை ஆசிரியரும் சிறுமியும் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் குற்றவாளி தந்தையை கைது செய்து சிறுமியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தந்தையின் சிறுநீரகங்கள் செயலிழந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது மனைவி அவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்தார். ஐந்து மாதங்களுக்கு முன், மனைவி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தாய் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். தந்தையை மகள் கவனித்து வந்துள்ளார்.

இருப்பினும், மகள் தனது மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவதாக குற்றம் சாட்டி கோபமடைந்த தந்தை கடந்த சில மாதங்களாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மற்றொரு சம்பவத்தில், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 12 வயது சிறுவனை விசாகப்பட்டினம் போலீசார் கைது செய்தனர். சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவன் 5வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *