பள்ளிகளின் விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..?: விரைவில் வெளியாக உள்ளது அறிவிப்பு..!

Loading

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது.

அதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இந்த மாதம் இறுதி வரை உச்சத்தில் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் அடுத்த வாரம் இரு மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து வழங்குவது குறித்து அதிகாரிகள் விரைவில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *