Dhanush: தனுஷுக்கு ரஜினிகாந்த் கொடுத்த பரிசு… அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?

Loading

கடந்த சில தினங்களாக தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு விவகாரம் பேசுபொருளான நிலையில், தனுஷுக்கு ரஜினி கொடுத்த பரிசு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை இரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.

அந்த அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனுஷுக்கு ரஜினி, கொடுத்த பரிசு குறித்தும் அதன் பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தீவிர சிவ பக்தரான தனுஷுக்கு ருத்ராட்சம் ஒன்றை பரிசளித்தாராம் ரஜினி. அதன் பிறகு அவர் வாழ்க்கையில் நேர்மறையாக பல நல்ல மாற்றங்கள் நடந்ததாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *