பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் திங்கட்கிழமை பெற்றுக் கொள்ளலாம்
பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 17.01.2022, திங்கட்கிழமை அன்று அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 17.01.2022, திங்கட்கிழமை அன்று அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தைப் பொங்கல் திருநாள் 2022 முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூர் சென்ற குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் கடந்த வாரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 17.01.2022, திங்கட்கிழமை அன்று நியாய விலைக் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17.01.2022, திங்கட்கிழமை அன்று நியாய விலைக் கடைகள் முன்கூட்டியே காலை 07.00 மணி முதல் திறக்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும். மேற்கண்ட காரணங்களால் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 17.01.2022 அன்று அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.