குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து; முதியவர் பலி, ரௌடி கைது
குடிபோதையில் வேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சென்னை, அயனவரத்தை சேர்ந்தவர் கிருபாநிதி. இவருக்கு வயது 20 ஆகும். இவர் ஒரு ரௌடியாவார். அதன்படி இவர் இன்று காலை, குடிபோதையில், தனது நண்பரான ஓட்டேரியை சேர்ந்த, பிரேம்குமார் (20) என்பவருடன், இருசக்கர வாகனத்தில், கொன்னுார் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, நம்மாழ்வார்பேட்டை அருகில், சாலையில் தாறுமாறாக ஓடிய இருசக்கர வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. பின், எதிர்புறமாக வந்த முதியவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், விபத்தில் இறந்தவர் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சண்முகம் (61) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பழ வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த விபத்தை ஏற்படுத்திய ரௌடி கிருபாநிதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கிருபாநிதி மீது, அண்ணா நகர் உட்பட சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.