நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் பிரதமருக்கு ஸ்டாலின் வீடியோகான்பிரஸ்சிங் கோரிக்கை
சென்னை, ஜன- 13
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வீடியோகான்பிரஸ்சிங் மூலம் வலியுறுத்தினார்
தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு பிரதமர் மோடி , வீடியோ கான் பிரஸ்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார், இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழக மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பிரபல தமிழ்பாடலை சுட்டிக்காட்டி தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டினார் தலைமை செயலகத்தின் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் செம்மொழி தமிழாய்வு மத்திய மையத்திற்கு ரூ 24.65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைத்து தந்தமைக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் மருத்துவக்கல்லுாரிகளை திறந்து வைத்தமைக்காகவும் பிரதமருக்கு அவர் மூன்று முறை நன்றி தெரிவித்து அவருக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார், முன்னதாக நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேன்டும் என்றும் கோவையிலும் எய்ம்ஸ் நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும்என்றும் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், பெரம்பலூர் தென்காசி மற்றும் மயிலாடுதுறையில் 6 மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசின் நிதியுதவியில் நடைபெற்று வரும் மருத்துவக்கல்லுாரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் மான்சூக் மாண்டோவியாவிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.