போக்ஸோ வழக்கில் ஆசிரியர் கைது
புதுக்கோட்டை: போக்ஸோ வழக்கில் ஆசிரியர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சங்கம் விடுதியைச் சேர்ந்தவர் வீ.சீனியப்பா(57). இவர், மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து சீனியப்பாவை நேற்று கைது செய்தனர்.