சென்னை திருவொற்றியூர் டோல்கேட் சிக்னல் அருகே உள்ள போக்குவரத்து காவல்துறையின் நிழற்குடை பலத்தகாற்றினால் சேதமடைந்தது.
![]()
சென்னையில் காற்றுடன் கனமழை பெய்துவந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் டோல்கேட் சிக்னல் அருகே உள்ள போக்குவரத்து காவல்துறையின் நிழற்குடை பலத்தகாற்றினால் சேதமடைந்தது.
அதேபோல் கனமழையின் காரணமாக சென்னை பழையவண்ணாரப்பேட்டை வார்டு49 வெங்கடாச்சலம் தெருவில் சாலையில் மழைநீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகியுள்ளனர்.மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.இதனால் தொற்று ஏதேனும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சபடுகின்றன.
எனவே சம்மந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பாதிக்கபட்ட பகுதியை உடனடியாக சீற்செய்யவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்.

