இந்தியா தடுப்பூசி செலுத்துவதில் ஒரு புதியசாதனையைஎட்டியுள்ளது. இது, விரைவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான உலகின் மிகப்பெரிய மையமாக மாறும்
மன் கிபாத்;
“SMALL EFFORTS SOMETIMES MAKE BIG CHANGES”
சில சிறிய முயற்சிகள்சிலசமயங்களில்
பெரிய மாற்றங்களை உருவாக்குகின்றன
சிறிய முயற்சிகள் இந்தியாவின் உருமாறும் பயணத்தை
வழிநடத்துகின்றன- கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில்,
ஒட்டுமொத்தஇந்தியாவின்உறுதிப்பாடு;உள்ளூர்
தயாரிப்புகள்மீதுதொடர்ந்துஅதிகரித்து வரும் பற்று; தூய்மைஎன்பதை
ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுதல்;நதிகளைப் புதுப்பிக்கும் முயற்சிகள்;
இதுவரைவெளிச்சத்திற்குவராத வீரர்களின்
பாரம்பரியத்தைமுன்னிலைப்படுத்தி, குடிமக்களை
ஊக்குவித்தல்ஆகியவற்றின்மூலம்இந்தியா ஒரு
பெரும்பாய்ச்சலுக்கானமுயற்சிகளைமேற்கொண்டு வருகிறது. இந்த
விஷயங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கிபாத்'
நிகழ்ச்சியில்குடிமக்களுடன்உரையாடினார்.
உரையின்சிலசிறப்பம்சங்கள்:
தூய்மை என்பதைஒரு பழக்கமாக்கிக்கொள்ளுதல்: தூய்மை என்பது
மரியாதைக்குரிய காந்தியடிகளுக்குசெலுத்தும்ஒரு பெரிய அஞ்சலி.
பல்லாண்டுகளுக்குப் பிறகு, இன்று, தூய்மை இயக்கம், புதிய
இந்தியாஉருவாகவேண்டும்என்ற கனவுடன்நாட்டை இணைத்துள்ளது
.தூய்மை என்பது இயற்கையைஒருதலைமுறையிலிருந்து மற்றொரு
தலைமுறைக்குமாற்றுவதற்கானபொறுப்பாகும். மேலும்
தூய்மைக்கானஇயக்கம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும்
போது, இந்தப் பண்பு சமூகத்தில்ஊடுருவிநிற்கும்.
பொருளாதார தூய்மை: பொருளாதார தூய்மைக்கு தொழில்நுட்பம்
பெரிதும் உதவும் என்பது உண்மை.கிராமங்களில்
கூட,சாமானியமக்கள், ஃபின்-டெக்யுபிஐ மூலம்
டிஜிட்டல்பரிவர்த்தனைகளின்திசையில்இணைக்கப்படுவதுநமக்குமகி
ழ்ச்சியளிக்கும் விஷயமாகும் …
அதுநன்குபரவி,அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.ஜன்தன் கணக்குகள்
தொடர்பாக நாடு தொடங்கியஇயக்கம்பற்றி நீங்கள் அறிவீர்கள்,
இதன் காரணமாக ஏழைமக்களுக்குரியபணம் நேரடியாக அவர்களின்
கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கழிவறைகளைக் கட்டுவது
ஏழைமக்களின்கௌரவத்தைஉயர்த்தியது, அதேபோல், பொருளாதார
தூய்மை ஏழைமக்களின்உரிமைகளை உறுதி செய்கிறது. அவர்களின்
வாழ்க்கையை எளிதாக்குகிறது.
தீன்தயாள்உபாத்யாயாஅவர்களின் பொருளாதாரதொலைநோக்குப்
பார்வை: தீன்தயாள்அவர்கள், சென்றநூற்றாண்டின் மிகச் சிறந்த
சிந்தனையாளர்களுள் ஒருவர். அவரது பொருளாதார தத்துவம்,
சமூகத்திற்குஅதிகாரம்வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்ட
அவரது கொள்கைகள், அவர் காட்டிய அந்தியோதயா
பாதைஆகியவை, தற்போதைய சூழலிலும்பொருத்தமானவை.
உத்வேகம் அளிப்பவை.
தீன்தயாள்அவர்களின்வாழ்க்கையிலிருந்து, நாம்
“இனிஇதுமுடியாதுஎன்றுஎதையும், ஒருபோதும்
கைவிட்டுவிடக்கூடாது”என்றஒரு பாடத்தையும்கற்றுக்கொள்கிறோம்.
பாதகமான அரசியல், கருத்தியல் சூழ்நிலைகள் இருந்தபோதிலும்,
இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு சுதேசி, உள்நாட்டு
மாதிரியின்பார்வையிலிருந்து அவர் ஒருபோதும்
பின்வாங்கவில்லை.
உள்ளூர்என்றுகுரல்கொடுப்போம்: விடுதலையடைந்து 75
வதுஆண்டில்,
விடுதலைபவளவிழாகொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
இந்தச்சமயத்தில், விடுதலைப்போராட்டத்தின்போதுகாதிக்குக்
கிடைத்த பெருமைக்குரியஅதேஇடத்தை இன்று நமது இளம்
தலைமுறையினர்காதிக்கு அளித்து வருகிறார்கள் என்று இன்று நாம்
திருப்தியுடன் கூறலாம். இப்போது தீபாவளி பண்டிகை வந்துவிட்டது
… விழாக்காலத்திற்கு,நீங்கள்வாங்கும்ஒவ்வொருபொருளும் காதி,
கைத்தறி, குடிசைத் தொழில் பொருட்களாகவாங்குவதன் மூலம்
'உள்ளூர்என்பதற்குஉரக்கக் குரல்கொடுப்போம்' என்ற பிரச்சாரத்தை
வலுப்படுத்த வேண்டும். அது, அனைத்து பழைய
சாதனைகளையும்முறியடிக்கும்வண்ணம்அமையவேண்டும்.
இதுவரைஅறியப்படாதஹீரோக்களுடன்
இளைஞர்கள்கொள்ளும்தொடர்பு:
விடுதலையின்பவளவிழாகாலகட்டத்தில்,
இந்தியவிடுதலைவரலாற்றின் சொல்லப்படாத
கதைகளைஅனைவரிடையேயும்பரப்புவதற்கானஇயக்கமும் நடந்து
வருகிறது …இதற்காக, வளர்ந்துவரும்எழுத்தாளர்கள், நாட்டின்
இளைஞர்கள் மற்றும் உலகத்தினர்அனைவரும்அழைக்கப்பட்டனர்.
இதற்காக, இதுவரை 13 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் 14 வெவ்வேறு
மொழிகளில் பதிவு செய்துள்ளனர். ஏறத்தாழ 5000 க்கும் மேற்பட்ட
வளரும்எழுத்தாளர்கள்விடுதலைப்போராட்டக்கதைகளைத்தேடிவருகி
றார்கள்.
ஆறுகளைமீட்டெடுத்தல்: இந்தியாவின்அனைத்து பகுதிகளிலும்,
ஆண்டுக்கு ஒரு முறையாவது நதி விழாவொன்றுகொண்டாடப்பட
வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நம்மைப்
பொறுத்தவரை, ஆறுகள் வெறும்
இயற்கைக்கூறுகள்மட்டுமல்ல;நமக்கு, ஒரு நதி ஒரு வாழும் அலகு.
பருவமழைக்காலத்தின்போதுநீர்சேகரிக்கவேண்டும்என்பதற்காக
“மழைத்துளிகளைப் பிடியுங்கள்”'கேட்ச் தி ரெய்ன்'
திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு
முன்பு வறண்டுவிட்டநாகநதி, உள்ளூர் பெண்களின் பங்களிப்புடன்
புத்துயிர் பெற்றுள்ளது.
பரிசுகளின் மின்-ஏலம்: இப்போதெல்லாம், ஒரு சிறப்பு மின்-ஏலம்
நடைபெறுகிறது. இந்த மின்னணு ஏலம், அவ்வப்போது மக்களால்
எனக்கு வழங்கப்பட்டபரிசுகள்தொடர்பானது.
இந்த மின்-ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம்
“நமாமிகங்கே”இயக்கத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின்உயர்ந்த உணர்வுகள்:
நமதுமாற்றுத்திறனாளிகளின்"எங்களால் முடியும்"என்றகலாச்சாரம்,
"எங்களால் முடியும்"என்றஉறுதிப்பாடு "எங்களால் செய்ய முடியும்"
என்றமனப்பான்மைஆகியவை ஊக்கமளிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு, சியாச்சினின் இந்த அணுக முடியாத
பகுதியில் 8 மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழுபடைத்தசாதனை
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை அளிக்கிறது. இந்திய
இராணுவத்தின்சிறப்புப்படைகளின்முயற்சியால் இந்த நடவடிக்கை
வெற்றிபெற்றது.
'தடுப்பூசி சேவை' இந்தியாவின் பாதுகாப்பு கேடயம்:
இந்தியா, கொரோனாதடுப்பூசிசெலுத்துவதில்புதிய
சாதனைகளைப்படைத்துவருகிறது, இது
மிகப்பெருமளவிலானதடுப்பூசிதிட்டங்களில் ஒன்றைக் கொண்டு
வருவதில்மிகச் சாதுரியமான திட்டமிடல் மற்றும்
தொலைநோக்குப்பார்வைக்காக உலக
அளவில்பாராட்டுகளைப்பெற்றுவருகிறது.