தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் சாக்கடைக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது
பாலக்கோடு.அக்.9-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடைக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது மழைக் காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடைக் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாக்கடைக் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை காண முடியாத அளவிற்க்கு அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய் தெரியாத அளவிற்க்கு ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.இதனால் சாக்கடை நீர் தெருக்களில் தேங்கி நோய்த் தொற்று முதல் பலவகையான பிரச்சினை ஏற்படுத்துகிறது.இதனால் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் 11 ம் வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி அவர்கள் முன்னிலையில் சாக்கடைக் கால்வாய்களை சீரமைக்க ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது.