கடலூரில் செல்போனில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி

Loading

கடலூரில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் செல்போனில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார். அவர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே, பொதுமக்கள் கூறிய கோரிக்கைகள் பற்றி கவனிக்காமல் தனது செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் யூடியூப்பில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை குறைகேட்பு கூட்டம் முடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பிற அதிகாரிகள் மற்றும் மனு அளிக்க வந்த பொதுமக்கள், பெண் அதிகாரி கூட்டத்தை கவனிக்காமல் சமையல் குறிப்பு பார்த்ததை கண்டு புலம்பினர்.

இதற்கிடையே பெண் அதிகாரி, செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக் கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *