தன்னிறைவை நோக்கி இந்திய உருக்கு தொழில் திரு.ராம் சந்திர பிரசாத் சிங், மத்திய உருக்கு துறை அமைச்சர்,

Loading

தன்னிறைவை நோக்கி இந்திய உருக்கு தொழில்
திரு.ராம் சந்திர பிரசாத் சிங், மத்திய உருக்கு துறை அமைச்சர், இந்திய அரசு

இந்திய உருக்கு தொழில் தற்சார்பு இந்தியா திட்டத்தில் சிறப்பான பங்களிப்பை
வழங்குவதில், உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் சிறப்பாக இருக்கும் என நான்
எண்ணுகிறேன். இத்திட்டத்துக்கு மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திரமோடி
தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.உற்பத்தி துறையை
வலுப்படுத்தவும், அதுதன்னிறைவு அடையவும் வகைசெய்யும் புதிய இந்தியாவை
உருவாக்குவதை நோக்கிய அவரது தொலைநோக்கும், அணுகுமுறையும் அமைந்துள்ளது.
மத்திய உருக்கு அமைச்சராக நான் கடந்த ஜூலையில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட
பின்னர், நான் காணும் முதல் கொள்கை நடவடிக்கையாகும் இது. உரிய முறையில்
சிந்தித்து, அதனை வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளைப்பயன்படுத்தி, சிறப்பாக
செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதற்கு இது அருமையான
உதாரணமாகும்.
இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், விசேஷ உருக்கு
உற்பத்தியை அதிகரிக்கும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும்.
எனவே, பொருட்களின் மதிப்பை பெருக்குமாறு அரசு ஊக்குவித்து வருகிறது. இதில்
இரட்டைப்பயன் உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மதிப்பு கூட்டப்பட்ட
பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மேலும், இத்திட்டத்தின் கீழ்,
ஊக்குவிப்புதொகையும் கிடைக்கும். ஒருங்கிணைந்த உருக்கு உற்பத்தியாளர்கள் மற்றும்
உப உருக்கு உற்பத்தியாளர்கள், சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும். விசேஷ உருக்கை உற்பத்தி செய்யும் உள்நாட்டு
நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.6,322 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்,
கணிசமான முதலீட்டை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஊக்குவிப்பு தேவைப்படும்
விசேஷ உருக்கு பற்றி உற்பத்தியாளர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்தும் தொழில்
நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். இந்தியாவின் உற்பத்தி

திறனையும், ஏற்றுமதியையும் பெருக்கும் 13 முக்கிய துறைகளில் விசேஷ உருக்கு பிரிவும்
ஒன்றாகும். இதற்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு சிறப்பான மதிப்பை அளித்து, இறக்குமதிக்கு உயரிய மாற்றை
வழங்கி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிப்பதை இந்த ஊக்குவிப்பு நோக்கமாகக்
கொண்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், எதிர்பார்க்கப்படும் கூடுதல் முதலீடுகள்,
உள்நாட்டு தேவையைப் பூர்த்திசெய்வதுடன், காலப்போக்கில் உலக அளவில்
போட்டியிடும் வகையிலான வளத்தை உள்ளடக்கியுள்ளது. உயர்தர உருக்கு உற்பத்தியில்
பிரதமரின் கனவான தற்சார்பு இந்தியா இலக்கை அடையவும், நவீன தொழில்நுட்ப
சூழலுடனான போட்டியை உருவாக்கவும் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் உதவும்.
இது, விசேஷ உருக்கு உற்பத்தியில், உள்நாட்டு திறனை ரூ.40,000 கோடி முதலீட்டுக்கு
உதவும். ரூ.30,000 கோடி இறக்குமதியை குறைத்து, ரூ.33,000 கோடி ஏற்றுமதிக்கு இது
வழிவகுக்கும். சுமார் 25 மில்லியன் டன் கூடுதல் உற்பத்தி திறனை உருவாக்கும்
ஆற்றலுடன், இத்திட்டம் சுமார் 5,25,000 வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும்.
இதில்,சுமார் 68,000 நேரடி வேலைவாய்ப்பு. எஞ்சியது மறைமுக வேலைவாய்ப்பாகும்.
இந்திய உருக்கு தொழில் வர்த்தகத்தில் மதிப்பு சங்கிலி குறைவாக இருப்பதால்,
விசேஷ உருக்கு பிரிவு ஊக்குவிப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 2020-21
நிதியாண்டில்,இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி 10.7 மில்லியன் டன்னாக இருந்தது. இதில்
விசேஷ உருக்கு 1.8 மில்லியன் டன். அதேசமயம், 4.7 மில்லியன் டன் இறக்குமதியில்,
இது 2.9 மில்லியன் டன் ஆக இருந்தது. குறைந்த ஏற்றுமதி, அதிக இறக்குமதி என்ற
சமன்பாடற்ற மொத்த வர்த்தக சதவீதம் இத்திட்டத்தால் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு
ஏற்படும்.

தேசிய உருக்கு கொள்கை 2017, உள்நாட்டு உயர்தர வாகன உருக்கு, மின்சார
உருக்கு தேவையில் மொத்தத்தையும் 2030-31 ஆண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கான
இலக்கை நிர்ணயித்துள்ளது. உருக்கு துறைக்கு அரசு ஊக்குவிப்பு அளித்தால் மட்டுமே,
விசேஷ உருக்கு உற்பத்தியை அதிகரித்து, இந்த இலக்கை நாடு எட்டமுடியும்.

இந்த ஊக்குவிப்பு திட்டம் , உயர்தரமான மதிப்பு கூட்டு உருக்கை உற்பத்தி
செய்யும் நாடுகள் அமைப்பில் இடம் பெறுவதற்கு நிச்சயம் உதவும் என நான் உறுதியாக
நம்புகிறேன். குறைந்த விலையில் உயர்தரம் என்னும் ‘மேக் இன் இந்தியா’ முத்திரையை
வலுப்படுத்த நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *