. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை

Loading

பழனி பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த 2வயதுகுழந்தை விவகாரத்தில் திருப்பம். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை பேருந்து நிலையத்தில் வீசிச் சென்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த 25ஆம் தேதி அதிகாலையில் 2 வயது குழந்தை ஒன்று தனியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரை தேடினர்.அப்போது பெற்றோர் யாரும் இல்லாததால் குழந் தையை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் ராமநாதபுரத்தில் இருந்து பழனி வழித்தடத்தில் வந்த பேருந்தில் இருந்து குழந்தையுடன் இறங்கிய ஒருஆணும், பெண்ணும் குழந்தையை‌ பழனி பேருந்து நிலையத்தில்‌ விட்டுவிட்டு மீண்டும் அதே பேருந்தில் ஏறிச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையின் பெயர் ருத்ரா முனீஸ்வரி(2) என்றும் குழந்தையின் தாய் ஆனந்தகுமாரி(22), தந்தை மோகன்(30) என்பதும்‌ தெரியவந்தது. மேலும் இவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும்,தற்போது திருப்பூரில் வசித்து வருவதும்‌ தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆனந்தகுமாரி ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஆனந்தகுமாரி தாய்வீட்டிற்கு செல்லாததால் மனைவி மற்றும் குழந்தையை பல்வேறு இடங்களில் மோகன் தேடி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமாரி கணவருக்கு தெரியாமல் மதுரை திருமங்களம் பகுதியில் கொத்தனார் வேலை செய்துவரும் மருது என்பவரை திருமணம் செய்ததும், இருவருக்குமிடையே குழந்தை ருத்ரா முனீஷ்வரி இடையூறாக இருந்ததால் குழந்தையை அவளது தந்தை மோகனிடம் ஒப்படைக்க கள்ளக்காதலன் மோகன் சொன்னதாகவும், கணவனிடம் ஒப்படைத்தால் தங்களுக்கு பிரச்சினை வரும் என்பதால் குழந்தையை எங்காவது விட்டுவிடலாம் என முடிவுசெய்த தாய் ஆனந்தகுமாரி கள்ளக்காதலனுடன் சேர்ந்து பழனி பேருந்துநிலையத்தில் கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து குழந்தையின் தாய் ஆனந்தகுமாரி கள்ளக்காதலன் மருது ஆகிய இருவரையும் பழனி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து பழனி காவல்நிலையத்திற்கு வந்த குழந்தையின் தந்தை மோகனிடம் குழந்தை ருத்ராமுனீஷ்வரியை ஒப்படைத்தனர். கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை தாயே பேருந்து நிலையத்தில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *