திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வரும் 28 ம் தேதி வருகை : கலெக்டர் தகவல்:

Loading

திருவள்ளூர் ஜூலை 24 : தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் டாக்டர்.மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகின்ற 28.07.2021 அன்று திருவள்ளுர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.

சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 28.07.2021 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறிய உள்ளனர்.

அப்பொழுது சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *