ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு கோவை சரக டி.ஐ.ஜி ., பாராட்டி, சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் ,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சம்மந்தமாக ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டு வரும் “காக்கும் கரங்கள்” அமைப்பின் சார்பில் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமில் காவல்துறைத் துணைதலைவர் எம். எஸ். முத்துசாமி இ.கா. ப., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள் தொடர்புடைய சட்டங்கள் அதனை தடுக்கும் முறைகள் உள்ளிட்டவைகள் பற்றி சிறப்புரை யாற்றினார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. சசிமோகன் ஐ.பி.எஸ்., கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு, பெண் ஆய்வாளர்கள், பெண்ஆளினர்கள், மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கினார் ,மாவட்ட காவல் ஆளினர்களின் குறைகளையும், அவர்களிடம் தனித்தனியாக கேட்டு அதனை குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்வதாகவும் உறுதி அளத்தார்.