திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களைவிவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார் அவர்களை தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 29.06.2021 அன்று நியமனம் செய்தார்கள். அதனை அடுத்து அன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி கூறி வாழ்த்து பெற்றார் பொன்குமார். நேற்று (01.07.2021) திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் விவசாயிகள் – தொழிலாளர் கட்சியின் பொருளாளர் என்.சுந்தராஜ், இளைஞரணி தலைவர் ஏ.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.