பாண்டிச்சேரி மெட்ரோ கிளை மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகள்
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு JCI பாண்டிச்சேரி மெட்ரோ கிளை இயக்கத்தின் சார்பாக மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகள்
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு JCI பாண்டிச்சேரி மெட்ரோ கிளை இயக்கமும், வாஞ்சிநாதன் வாலண்டீர் யூத் கிளப், வில்லியனூர், வாசவி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி மற்றும் வனிதா கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி இணைந்து கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா வில்லியனூர் (ப்ரைமரி ஹெல்த் சென்டர் PHC) அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதில் JCI பாண்டிச்சேரி மெட்ரோ கிளை இயக்கத்தின் தலைவர் JC.L.புகழேந்தி தலைமை ஏற்க, சிறப்பு விருந்தினராக சிவா MLA அவர்களும், அருள் மெடிக்கல் ஜேசி வெங்கடேசன், ஜேசி சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவர்களை கௌரவப் படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் JCI உறுப்பினர்கள் JC.கதிரவன் Jc.விநாயகம் JC.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றத்தின் நிறுவனர் ராமன், தலைவர் முருகன், வாசவி சங்கம் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் விஜயன் செய்தார்கள். உடன் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பாண்டிச்சேரி ஜேசிஐ மெட்ரோ கிளை இயக்கத்தின் தலைவர் புகழ் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் சிவா அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.