வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Loading

வேலூர் ஜூன் 27

வேலூர் மாவட்டம், வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் வழியாக வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்கள் முக கவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினார்.

பின்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை தடுப்பது பற்றியும்,அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *