பேர்ணாம்பட்டு அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய மூவர் கைது .

Loading

வேலூர் ஜூன் 18

வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு வனசரகத்திற்குபட்ட பல்லாலக்குப்பம் மற்றும் காப்புகாட்டு பகுதிகளில் ஒரு கும்பல் தொடர்ந்து காட்டுபன்றிகளை சுருக்கு கம்பி வலை வைத்து கொன்று வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.இதனை அடுத்து அங்கு சென்றுபார்த்த போது காட்டுபன்றியை சுருக்கு கம்பி மூலம் கொன்று வெட்டி கறியை விற்பனைக்காக கொண்டு செல்ல முற்பட்டனர்.

பல்லாலகுப்பம் கிராமத்தை சேர்ந்த தரணி மற்றும் ரமேஷ்,தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்றுபேரையும் வனத்துறையினர் பிடித்து காட்டுபன்றியை பறிமுதல் செய்தனர்.. வேட்டையாடிய மூவருக்கு ரூபாய் 24 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *