தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்தக்கொராணா காலகட்டத்தில் கிராமத்திலிருந்து நகரங்களுக்கு சென்று மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க போக்குவரத்து இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் இதை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படும் வகையில் 50 விழுக்காடு அளவாவது பஸ் போக்குவரத்தை சில தளர்வுகளுடன் இயக்க அரசு அனுமதிக்க வேண்டும்.
கிராமங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து துணிக்கடை திறக்க அனுமதிக்குமாறும் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடந்த 45 நாட்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இவர்களுக்கு உதவிட தமிழக அரசு முன்வர வேண்டும் அதேபோல் இப்போது பள்ளி கல்வித்துறை அறிவித்து மாணவர்கள் சேர்க்கையில் பயன்படும் வகையில் நகலகம் கடைகளையும் மற்றும் பல்வேறு கடைகளை திறக்காமல் இருக்கும் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் தாங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்று இந்தக் கொராணா காலகட்டத்தில் பொதுமக்களையும் வணிகர்களையும் எந்த ஒரு சிரமத்திற்கு வழிவகை இல்லாமல் தொடர்ந்து எங்கள் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் இதைப்போல் அனைத்து கடைகளை திறக்க தாங்கள் வழிவகை செய்யுமாறும்
வங்கி கடனை 6 மாதத்திற்கு பின்னர் வசூலிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் வணிகர்களை முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்