மாணவியிடம் நேரிலும், தொலைபேசியிலும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் உடற் பயிற்சி நிலைய ஆசிரியர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்*

Loading

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் அஜிஸ் நகரை சேர்ந்தவர் சிவகுமார் (52), முன்னாள் ரானுவ வீரரான இவர் வடமங்களம் பகுதியில் ஒரு காலி மனையில் காவல் துறையில் சேர்வதற்கு உடற் தேர்வுகான பயிற்சி மையம் நடத்தி வருகிறார், இவரிடம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த லோகிதா (21) என்ற பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி போலிஸ் உடற் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சிவகுமாரிடம் உடற் பயிற்சி வகுப்பில் பயின்று வந்துள்ளார்.

மாணவியிடம் சிவகுமார் அவப்போது பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மாணவி பயிற்சி நிலையம் செல்வதை நிறுத்தி கொண்டார், இதனை அடுத்து சிவகுமார் மாணவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி, தன்னுடன் தனிமையில் இருக்க அழைத்துள்ளார், இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி தன் தந்தையிடன் பயிற்சியாளர் தன்னுடன் ஆபசமாக பேசியதை தெரிவித்துள்ளார், இதனை அடுத்து நடந்தவற்றை குறித்து மாணவியின் தந்தை சிவசங்கரன் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புகொண்டதை அடுத்து அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்..

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *