திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் சார்பாக மருத்துவ உபகரணங்கள் : பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கினர்
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் சார்பாக மருத்துவ உபகரணங்கள் : பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கினர் :
திருவள்ளூர் ஜூன் 08 : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் தலைமையில் பொன்னேரி அரசு பொதுமருத்துவமனை மற்றும் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தனியார் நிறுவனங்களின் சார்பாக சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ரூ. 2.37 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கொரோனா நோய்த்தொற்று களப்பணிகள் மாவட்டந்தோறும் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தற்போது 120 படுக்கைகளும் இதில் 90 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடனும் 30 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் இல்லா படுக்கைகளுமாக உள்ளன. மருத்துவமனையில் மொத்த ஆக்சிஜன் பாயின்ட்ஸ் 100 (அறுவை அரங்கம் உட்பட) கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 50. இதுவரை ஒரே ஒரு படுக்கையுடன் இருந்த தீவிர சிகிச்சை பிரிவு 11 படுக்கைகள் கொண்ட பிரிவாக விரிவடைந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் உருளைகள் மூலமும் ஆக்சிஜன் செறிவூட்டல் மூலமும் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. இம்மருத்துவமனையில் மொத்தம் 14 வெண்டிலேட்டர்கள் உள்ளன. இந்த 14 வெண்டிலேட்டர்களில் 1 டயாலிசிஸ் பிரிவிலும் 1 அறுவை சிகிச்சை பிரிவிலும் 12 கொரோனா பிரிவிலும் உள்ளன.
காட்டுப்பள்ளியில் இயங்கும் எல் அன் டி நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ்
பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் 500 எல் பி எம் திறன் உள்ள ஆக்சிஜன்
உற்பத்தி மையம் அமைக்க உடன்படிக்கை செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மருத்துவமனையில் துரிதமாக நிறுவப்பட்டது.
தொடுகாடு மற்றும் நமச்சிவாயபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் சார்பாக கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு சமூக பங்களிப்பு நிதியில் ரூ.1.37 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். மேலும் இது போன்று அனைத்து பெரு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி இயக்குநர்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.குருநாதன் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.ராணி பொன்னேரி அரசு பொது மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.அனுராதா ஆவடி மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன் ஆவடி வட்டாட்சியர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.