திருவள்ளூர் அருகே வரதட்னை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது :

Loading

திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (36).இவர் துபாயில் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு (5) அர்ஜீன் என்ற மகனும் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 25 தினங்களுக்கு முன்பு வினோத் துபாயிலிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வினோத் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ‌ஒரு வாரத்தில் மனைவி மஞ்சுளா கடந்த 23 ம் தேதி வீட்டில் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொன்டதாக மஞ்சுளாவின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து நேரில் வாந்த மஞ்சுளாவின் பெற்றோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்த மஞ்சுளாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார் மேலும் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் ஏற்கனவே வரதட்சணை பிரச்சினை பலமுறையால் சர்ச்சைகள் எழுந்ததாகவும் வரதட்சணை கேட்டு தனது மகளை கொலை செய்திருக்கலாம்‌ என செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக மஞ்சுளாவின் கணவர் வினோத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *