Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்
Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 18, 2021
சென்னை: பிலவ வருடம் சித்திரை 05ஆம் தேதி ஏப்ரல் 18, 2021 ஞாயிற்றுக்கிழமை. சஷ்டி திதி இரவு 10.35 மணி வரை அதன் பின் சப்தமி திதி. திருவாதிரை விடிகாலை 05.01 மணிவரை அதன் பின் புனர்பூசம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை அற்புதமாக இருக்கும்.
ரிஷபம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுனம்
சந்திரன் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
கடகம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் வாங்கி வைத்த சரக்குகள் விற்றுத்தீரும்.
கன்னி
சந்திரன் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் லாபம் கிடைக்கும்.
துலாம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபார ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
விருச்சிகம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுப காரிய முயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானமும் கவனமும் தேவை.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த சண்டைச்சச்சரவுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் வரும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். கடன்கள் ஓரளவு குறையும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் நன்மை ஏற்படும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.