திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஐ.பி.செந்தில்குமாரை ஆதரித்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஐ.பி.செந்தில்குமாரை ஆதரித்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது :- தமிழர்களின் வாழ்வோடும் கலாச்சாரத்தோடும் கலந்துள்ள
தமிழ்க்கடவுள் முருகன் இருக்கும் பழனியில் பேச வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.எந்தமதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மனிதநேயத்தில் நம்பிக்கை இருப்பதால்தான் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், அந்த மனிதநேயத்தை சிதைப்பதற்காகவே பாஜக கட்சி பணிபுரிகிறது என்றும், அதற்கு அதிமுக உதவுகிறது என்றும் தெரிவித்தார். திமுக வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்தை பாதுகாக்க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உதவும் என்றும், இந்திய கலாச்சாரம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான்.ஆனால் பாஜக மொழி, கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்திலும் ஒருமுக கலாச்சாரத்தை கொண்டு வரத்துடிக்கிறது என்றும், புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பாஜகவிற்கு அதிமுகவின் இரட்டைத் தலைமையும் ஒத்து ஊதுவதாக தெரிவித்தார். மேலும் தமிழ் என்பது சமஸ்கிருதத்தின் ஒருபகுதி அல்ல என்று பாஜக கூறுகிறது என்றும், பன்மொழிகளை கொண்டதுதான் இந்தியா என்றும், தமிழர்களின் தாய்மொழியான தமிழை சிதைக்க மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் அதை ஒருக்காலமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவும் அனுமதிக்காது என்றும், இன்று குடியுரிமை திருத்த சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாகவும், இந்த சட்டத்தை அனுமதித்தால் இந்தியா மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் லவ் ஜிகாத் தடை சட்டத்தை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.இதன்மூலம் இந்துத்துவ பாசிச அரசை நிறுவ மோடியும், அமித்ஷாவும் முயல்வதாகவும், இந்த இக்கட்டான சூழலை தவிர்க்க தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமலயவேண்டும் என்றும், இவ்வாறு அமைந்தால் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே பாஜக விடம் இருந்து காப்பாற்ற எடுத்த நடவடிக்கையாக மாறும் என்றும் தெரிவித்தார். இந்தியா இன்று வங்கிகள், மருத்துவமனைகள், பொதுத்துறை நிறுவனங்கள், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பலவகையில் தாக்குதலை சந்தித்துவயுவதாகவும், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துத் போராடிவரும் விவசாயிகளில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து தியாகிகளாக மாறியுள்ளனர். இந்தியர்களின் எதிர்காலம் என்பது இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது என்றும், ஒருபுறம் பொருளாதார தாக்குதல், மறுபுறம் மதவாத தாக்குதல் என்று இரண்டு பக்கங்களிலும் தாக்குதல் நடந்துவருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தால் மட்டுமே சாத்தியம் என்றும், மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தில்ல என்றும் தெரிவித்தார். இவ்வளவு நடக்கும்போதும் ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் மத்திய அரசு கொண்டுவரும் மக்கள்விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும், தெருக்கூத்தில் ஒருவர் கதை சொல்லும்போது இருவர் தந்தனா பாடுவது போல் மோடியின் பேச்சுக்கு அதிமுகவின் இருதலைவர்களும் தந்தனா பாடுவதாகவும் கூறினார்.எனவே இதுபோன்ற இன்னல்களில் இருந்து தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் காப்பாற்ற தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமையவேண்டும் என்றும், அதற்கு அனைவரும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக வேட்பாளர் ஐபி.செந்தில்குமார் அவர்களுடைய வெற்றிவிழாவில் கல்நுதகொள்ள மீண்டும் பழனி வருவேன் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.