தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தலைமைச்செயலக காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
![]()
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை
சார்பில் தலைமைச்செயலக காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை
யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்,
இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச்
சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான
பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க உரிய பாதுகாப்பு உணர்வை
ஏற்படுத்திட, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும்,
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள்
மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை
இராணுவப் படையினர் ஒருங்கிணைந்து, முக்கிய மக்கள் கூடும், வசிப்பிட
பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு (Police Flag March) நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (25.03.2021) காலை அயனாவரம் சரக உதவி
ஆணையாளர் திரு.சீனிவாசன் அவர்கள் தலைமையில், G-5 தலைமைச்செயலக
காலனி காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்
ஆளிநர்கள் மற்றும் துணை இராணுவப்படையினருடன் G-5 தலைமைச்செயலக
காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காவல் கொடி அணிவகுப்பு
நடைபெற்றது. கொடி அணி வகுப்பு கெல்லீஸ் சிக்னலில் தொடங்கி, லாக்மா நகர்
சந்திப்பு, குட்டியப்பன் தெரு சந்திப்பு, சன்னியாசபுரம் சந்திப்பு, ESI மருத்துவமனை
வழியாக சென்று IMH அருகே முடிவுற்றது.
