திருவண்ணாமலையில் தேசிய மாணவர் படை உயரிய விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு…
திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படையின் அலுவலராகவும், கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் விஜய் ஆனந்த். இவர் கடந்த 9ஆண்டுகளாக தேசிய மாணவர் படையில் பல மாணவர்கள் மாவட்ட, மாநில,தேசிய அளவில் சாதனை படைத்து விருதுபெறும் வகையில் பயிற்சி அளித்ததற்காகவும்,கொரோனா காலத்தில் சிறப்பாக மாணவர்களை வழிநடத்தியதற்காகவும் டெல்லியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை தலைமை அலுவலகத்தில். (என்ஜிஎன்சிசி )என்ற உயரிய விருதினை டி.ஜி. அடையாள அட்டை மற்றும் பதக்கம். ரூபாய் 2500 வழங்கப்பட்டது. மேலும்.அதனை காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு பட்டாலியன் அலுவலகத்தில் வைத்து தேசிய மாணவர் படை அலுவலர் டி.விஜய்ஆனந்த் பெற்றுள்ளார்.இதையொட்டி விருதுபெற்ற ஆசிரியருக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ் சாமுவேல் உள்ளிட்ட பலர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.