சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துணை ராணுவ படைகள் தங்கியுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சட்டமன்ற தேர்தல் வாக்கு சாவடிகள், மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்ட வளாகங்கள் , துணை ராணுவ படைகள் தங்கியுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (15.03.2021) மாலை, வாக்கு சாவடி வளாகங்கள், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எம்.கே.பி நகர், அம்பேத்கர் கல்லூரி, திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் உயர் நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை பாரதி கலைக்கல்லூரி, ஐஸ்அவுஸ், என்.கே. திருமலா ஆச்சாரியார் நேஷனல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு , நேரில் சென்று பார்வையிட்டு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
வேப்பேரி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மணலி திருத்தங்கல் நாடார் கல்லூரி மற்றும் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, ராயபுரம், மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு தேர்தல் சார்ந்த நடவடிக்கைகள் எடுத்து வரும் மற்ற துறை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் துணை ராணுவ படைகள் தங்கியுள்ள பெரியமேடு சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் காவலர் தங்கும் விடுதி ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு, மத்திய துணை ராணுவ படை வீரர்களிடம், குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) திரு.T.செந்தில்குமார், இ.கா.ப, இணை ஆணையாளர்கள் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப, (மேற்கு), திரு.A.T.துரைக்குமார், இ.கா.ப (வடக்கு) புளியந்தோப்பு துணை ஆணையாளர் திரு.s.ராஜேஷ்கண்ணா, இ.கா.ப, மைலாப்பூர் துணை ஆணையாளர் திரு.சசாங்சாய், இ.கா.ப மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *