தமாகா- விற்கு சைக்கிள் சின்னம் கிடைக்க இறுதி வரை முயற்சி செய்வேன் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

Loading

தமாகா- விற்கு சைக்கிள் சின்னம் கிடைக்க இறுதி வரை முயற்சி செய்வேன் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி 13 வது செயற்குழு கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் சென்னை தி.நகரில் நடைபெற்று நடைபெற்றது. இதில் 400ற்கும் மேற்பட்ட இளைஞர் அணியின் தொண்டர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

கூட்டணி சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறிய அவர், நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமாகா இளைஞர் அணி 234 இடங்களிலும் களப்பணியாற்றுவர்கள் என்று தெரிவித்தார்.

மேலும் எதிர் கட்சியியினர் அளித்துள்ள பொய் வாக்குறுதிகள் தோற்று போகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை 100% பயன்படுத்தி சட்டமன்றத்தில் தமாகா குரல் ஒலிக்கும் நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று கூறினார்.

மேலும் எங்களுடைய சைக்கிள் சின்னம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற சட்ட முயற்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இறுதி வரை அந்த முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *