வேகத்தடையில் கீழே கிடந்த பையை அதே ஊரைச் சேர்ந்த திரு. பொன்னம்பலம் என்பவர் எடுத்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உட்கோட்டம். கெங்கவல்லி காவல் நிலையம் பகுதியில்
23/ 02 /2020 அன்று தெடாவூர் கிராமத்தில் அம்பேத்கர் நகர் வேகத்தடையில் கீழே கிடந்த பையை அதே ஊரைச் சேர்ந்த திரு. பொன்னம்பலம் என்பவர் எடுத்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கெங்கவல்லி காவல் நிலையத்தில் மேற்கொண்டு தீவிர விசாரித்து பையை தவறவிட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீரகனூர் காவல் ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் அழைத்து அந்தப் பையில் இருந்த பணம் ரூபாய் 50,000 மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்தனர் .மேலும் அந்தப் பையை எடுத்துக் கொடுத்த வரின் நேர்மையை கண்டு அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.