சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் விருகம்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் விருகை V.N.ரவி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு வாசகர் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

சென்னை சாலிகிராமம் முழுநேர கிளை நூலகத்தில் விருகம்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் விருகை V.N.ரவி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி முடிக்கப்பட்டு 25/02/2021 இன்று மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு வாசகர் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேல் மாடியில் திறக்கப்பட்ட IAS மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு 8 கணினி வசதியுடன் தனி அறை ஒதுக்கப்பட உள்ளது. தனிப்பிரிவு மகளிர்க்கு என ஒதுக்கப்பட உள்ளது. இந்நூலகத்தில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 10,236 உறுப்பினர்களும், ரூபாய் 1000 கொடுத்து புரவலராக இணைந்தவர்கள் – 280 பேரும், ரூபாய் 5000 கொடுத்து பெரும் புரவலர்களாக இணைந்தவர்கள் – 14 பேரும் , ரூபாய் 10000 கொடுத்து கொடையாளர்களாக இணைந்தவர்கள் – 4 பேரும் இந்நூலகத்தில் இணைந்துள்ளார்கள்.
தற்போது நூலகத்தில் குடும்ப உறுப்பினர் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது 110 ரூபாய் கொடுத்து ஒரு குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இத்திட்டத்தின்படி புத்தகத்தை எடுத்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் S.இளங்கோ சந்திரகுமார், நூலக ஆய்வாளர் P.ரங்கநாயகி, நூலகர் Pகமலக்கண்ணன், வாசகர் வட்ட தலைவர் எஸ். இராஜேந்திரன், விருகம்பாக்கம் வடக்கு பகுதி கழக செயலாளர் C.K. முருகன், விருகம்பாக்கம் தெற்கு பகுதி கழக செயலாளர் A.M.காமராஜ், தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட இணை செயலாளர் கழக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை S.P.குமார் மற்றும் வாசகர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *