திருச்சியில் ஜெ., பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Loading

திருச்சி: பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று பரஞ்சோதி தலைமையில் நடந்த புறநகர் வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி தில்லைநகரில் உள்ள புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் பிரிண்ஸ் தங்கவேல் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர்கள் முசிறி செல்வராஜ், மணச்சநல்லூர் பரமேஸ்வரி, முன்னாள் அமைச்சர் அண்ணாவி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டம் ஜெய்குமார், அந்தநல்லூர் கோப்பு நட்ராஜ், மண்ணச்சநல்லூர் ஜெயக்குமார், ஆதாளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். ஏழை மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு வங்கிகளில் 17 லட்சம் விவசாயிகள் பெற்றுள்ள ரூ. 12 ஆயிரம் கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விவசாய பம்ப் செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறும் அளவுக்கு அயராது பாடுபடவேண்டும். 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யிடம் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *