தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் முப்பெரும் விழா.

Loading

தூத்துக்குடி பிப்ரவரி 15

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தூத்துக்குடி புதுகிராமம், பிரதான சாலையின் அருகே புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட தலைமை அலுவலகத்தில் முப்பெரும் விழா கொண்டாடினர்.
தூத்துக்குடி புதுக்கிராமம், பிரதான சாலையின் அருகே தே.மு.தி.க. கட்சியின் கொடிநாள் விழா, மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் தலைமையில் கொண்டாடினர். மாநில தொழிற்சங்க துணைத்தலைவரும், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளருமான ஆதிலிங்க பெருமாள் தேமுதிக மாவட்ட கழக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஆறுமுகநயினார் , வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி , மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சுப்பிரியா , தலைமை செயற்குழு உறுப்பினர் தயாளலிங்கம்(தூத்துக்குடி) ,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் (திருச்செந்தூர்) , சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் தனராஜ் (திருவைகுண்டம்), மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள்,மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *