மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு திட்டமான வட சென்னையை தென் சென்னையுடன் இணைக்கும் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம்…

Loading

அன்புடையீர்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு திட்டமான வட சென்னையை தென் சென்னையுடன் இணைக்கும் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிச்சாமி,மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்கள் இன்று 14.2.2021 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற இருக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார்கள்.

இந்த திட்டங்களை துவக்கி வைக்க வருகை தாரும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களை எழுச்சியுடன் வரவேற்க தென்சென்னை தெற்கு(மேற்கு) மாவட்ட கழகத்தை சார்ந்த, மாவட்ட,பகுதி,வட்ட,பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட, பகுதி, வட்ட பொறுப்பாளர்கள், இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள்,மகளிர் அணியினர் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி,
அன்புடன்,
விருகை V.N.ரவி,எம்.எல்.ஏ.,
மாவட்ட கழக செயலாளர்,
தென்சென்னை தெற்கு(மே) மாவட்ட கழகம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *