சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சி களிலிருந்து விலகி பாஜக வில் இணைந்தனர்:மாநில தலைவர் முருகன் புதியதாக இணைந்த தொண்டர்களுக்கு வாழ்த்து.

Loading

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி மாநாடு வருகின்ற 21ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பந்தல் மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மேடை அமைக்கும் பணிகளை
மாநில தலைவர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார். இதனிடையே வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாவரி பகுதியில் பொறியாளர் லோகநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் மணிகண்டன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆட்டையாம்பட்டி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக பூலாவரி வந்தடைந்த தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு மேளதாளங்கள் முழங்க மலர்மாலைகள் அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *