திருவள்ளுவர் சித்தர் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டும் சிறப்பு பெரும் தமிழ் மூவர் க்கு பாராட்டு விழா.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்திலுள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், உளுந்தூர்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் சித்தர் தமிழ்ச் சங்கம் வழங்கும் தமிழ் சங்க சிறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியின் நிர்வாக இயக்குனர் யதீஸ்வரி ஸ்ரீ ஆத்ம விகாஸபிரியா அம்பா அவர்கள் தலைமையிலும், திருவள்ளுவர் சித்தர் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு தலைவர் மு. அன்பழகன், அவர்களின் முன்னிலையிலும், இறைவணக்கம் சிவாலயா தொடக்கப்பள்ளி மேலாண்மை நெறியாளர் இரா. சிவப்பிரகாசம் அவர்களும், திருவள்ளுவர் சித்தர் தமிழ்ச் சங்க தலைவர் சீராள. சிவப்பிரகாசம் அவர்களின் வரவேற்புரையுடனும் மற்றும், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் க.ஜெயசங்கர் அவர்களின் வாழ்த்துரையுடனும் இவ்விழா தொடங்கியது.
இவ்விழாவில் மத்திய ,மாநில நல்லாசிரியர் விருது பெற்ற, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஐயா திரு முத்து. அண்ணாமலை அவர்கள் மற்றும், ஐயா சீராள.சிவப்பிரகாசம் அவர்கள், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஐயர் அ. இராசமாணிக்கம் அவர்கள் ஆகிய மூவருக்கும் உளுந்தூர்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் சித்தர் தமிழ்ச் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு அவர்கள், மற்றும் மா.இராஜேந்திரன் சோரடியா அவர்களும் விருதுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
மேலும் இவ்விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற மூவரையும் பாராட்டி வணங்கி மகிழ்ந்தார்கள், திருவள்ளுவர் சித்தர் தமிழ்ச்சங்கத்தின் செயலர் அ.க. முருகன் தொழிலதிபர் அவர்கள், மற்றும் க.வீரப்பன், க.சுப்பிரமணி சி.கனகசபை.

மேலும் இவ்விழாவில் ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள வழக்கறிஞர்களும், மற்றும் தமிழ் பற்றாளர்களும், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இறுதியில் திருவள்ளுவர் சித்தர் தமிழ் சங்கத்தின் பொருளாளர், கோ.தெய்வீகன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *