சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Loading

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, ஆவடத்தூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கச்சிப்பள்ளி முனியப்பன் கோவில் ஓடையின் அருகே, நீர் செறிவூட்டும் கிணற்றிற்கு மாவட்ட ஆட்சியர் பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். அருகில், கூடுதல் இயக்குனர் / திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன், செயற்பொறியாளர் சடையப்பன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. பானுமதி பாலசுப்பிரமணியம், ஆவடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. சத்யா செல்வம் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *